செய்திகள்

விருதுநகரில் ஐடிஐ பயிற்சியாளர் பலி

Published On 2019-02-14 14:40 GMT   |   Update On 2019-02-14 14:40 GMT
அரசு ஐ.டி.ஐ. உதவி பயிற்சியாளர், வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் அரசு ஐ.டி.ஐ.யில் உதவி பயிற்சி யாளராக பணியாற்றியவர் கணேசன் (வயது 53). இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம், பேட்டை வீரபாகு நகர் ஆகும். விருதுநகர் சூலக்கரையில் ஒரு வீட்டின் மாடியில் அறை எடுத்து கணேசன் வேலைக்குச் சென்று வந்தார்.

இன்று காலை அவரது அறை கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சூலக்கரை போலீசார் விரைந்து சென்று பார்த்த போது கணேசன் இறந்து கிடந்தார்.

அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News