செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

Published On 2019-02-14 06:39 GMT   |   Update On 2019-02-14 06:39 GMT
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே அனுமதியின்றி மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள கண்ணம்பாக்கம் கிராமத்தில்சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசாரை கண்டதும் அவ்வழியே வந்த டிராக்டரை சாலையோரம் நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். டிராக்டரை சோதனை செய்தபோது அதில் ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மணலுடன் டிராக்டரை பறி முதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News