செய்திகள்

அதியமான்கோட்டை அருகே ஆசிரியை வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

Published On 2019-02-10 18:18 GMT   |   Update On 2019-02-10 18:18 GMT
அதியமான்கோட்டை அருகே ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
நல்லம்பள்ளி:

தர்மபுரியை அடுத்த அதியமான்கோட்டை சத்யா நகரை சேர்ந்தவர் தனபால் (வயது 34). இவர் தொப்பூர் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (30). இவர் எலுமிச்சனஅள்ளி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் வீட்டை பூட்டை பூட்டி விட்டு பள்ளிகளுக்கு சென்று விட்டனர். மாலை தனபால் வீட்டுக்கு வந்த போது பீரோவில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை பார்த்த போது அதில் வைத்திருந்த 5 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் மொட்டை மாடி வழியாக உள்ளே சென்று நகையை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டு போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News