செய்திகள்
கே.வி.நல்லூர் அருகே டிரைவர் திடீர் மாயம்
கே.வி.நல்லூர் அருகே வெளியூர் சென்ற டிரைவர் மாயமானது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலை அடுத்த கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் ஜேக்கப்ஆபிரகாம் (வயது 31). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி ஜெபசுதா. இவர் ஊழியம் செய்து வருகிறார்.
ஜேக்கப்ஆபிரகாம் டிரைவர் வேலை காரணமாக அடிக்கடி வெளியூருக்கு சென்று விட்டு பல நாள்கள் கழித்து திரும்பி வருவது வழக்கம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சென்றவர் இது வரை திரும்பி வரவில்லையாம். அவரின் செல்போனையும் தொடர்பு கொள்ள முடிய வில்லையாம். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இது பற்றி ஜெபசுதா அளித்த புகாரின் பேரில் கரிவலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.