செய்திகள்

திருவள்ளூர் அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு கொள்ளை

Published On 2019-01-10 10:11 GMT   |   Update On 2019-01-10 10:11 GMT
திருவள்ளூர் அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த காக்களூரில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்து ஊழியர்கள் கடையை மூடிச் சென்றனர்.

இந்த நிலையில் இன்று காலை டாஸ்மாக் கடையின் சுவரில் பெரிய துளைபோடப்பட்டு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருவள்ளூர் தாலுக்கா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மதுக்கடையில் விற்பனை பணத்தை நேற்று ஊழியர்கள் வீட்டுக்கு எடுத்து சென்று விட்டதால் அவை தப்பியது.

பணம் இல்லாததால் கடையில் இருந்த சுமார் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம கும்பல் சுருட்டி சென்றுள்ளனர்.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News