செய்திகள்

வெம்பாக்கம் அருகே திருமணத்திற்கு பயந்து மாப்பிள்ளை மாயம்

Published On 2019-01-08 11:11 GMT   |   Update On 2019-01-08 11:11 GMT
வெம்பாக்கம் அருகே திருமணத்திற்கு பயந்து மாப்பிள்ளை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெம்பாக்கம்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பொக்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 50). கூலி தொழிலாளி. இவரது மகன் ஆனந்தன் (27).

இவர் காஞ்சிபுரம் ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

ஆனந்தனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் திருமணம் வேண்டாம் என தவிர்த்து வந்தார். இந்த நிலையில் ஆனந்தனுக்கு அவரது தந்தை பெண் பார்த்து நிச்சயம் செய்து அடுத்த மாதம் 14-ந் தேதி திருமணத்திற்கு நாள் குறித்து உள்ளனர்.

திருமணத்தில் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி நிச்சயம் செய்ததால் ஆனந்தன் கடந்த 14-ந் தேதி வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தேடி பார்த்தும் ஆனந்தன் கிடைக்கவில்லை.

இதையடுத்து ஆனந்தனின் தந்தை பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டபானி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் நிச்சயம் செய்த மாப்பிள்ளை காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News