செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் 43 ரேசன் கடைகளில் பறக்கும் படையினர் ஆய்வு

Published On 2019-01-01 10:05 GMT   |   Update On 2019-01-01 10:05 GMT
திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் 43 ரேசன் கடைகளில் பறக்கும் படை ஆய்வு நடத்தப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஏகாம்பரம் ஆணையின்படி பொது வினியோக திட்டத்தை செம்மைப்படுத்தும் பொருட்டு கூட்டுறவுத் துறை அலுவலர்களை கொண்டு திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் 43 ரேசன் கடைகளில் பறக்கும் படை ஆய்வு நடத்தப்பட்டது.

முறைகேடுகள் செய்த விற்பனையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ரேசன் கடைகளில் நடைபெறும் ஆய்வின் போது கடும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய விற்பனையாளர் மீது குற்றவழக்கு மற்றும் நிரந்தர பணிநீக்கம் போன்ற கடும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News