செய்திகள்

கெடார் அருகே வீரமுர் ஏரியில் மணல் அள்ளிய மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு

Published On 2018-12-30 03:23 GMT   |   Update On 2018-12-30 03:23 GMT
விழுப்புரம் கெடார் அருகே வீரமுர் ஏரியில் மணல் அள்ளிய மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கிக் சூடு நடத்தப்பட்டது. இதில் குண்டு பாய்ந்து மாடு படுகாயம் அடைந்தது.
விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே வீரமுர் ஏரியில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது. இதனால் பயந்துபோன தொழிலாளர்கள் பதுங்கிக் கொண்டனர்.

சீறிப்பாய்ந்து வந்த துப்பாக்கிக் குண்டு மாட்டின் மீது பாய்ந்தது. இதில் மாடு படுகாயம் அடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News