செய்திகள்
கோவில் பூசாரி பூச்சி மருந்து குடித்து தற்கொலை
அதியமான்கோட்டை அருகே கோவில் பூசாரி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையை அடுத்துள்ள சாமிகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது55). இவர் அங்குள்ள மாரியம்மன்கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.
சம்பவத்தன்று சின்னசாமி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சின்னசாமிக்கு 3 மகனும், 2 மகளும் உள்ளனர்.