செய்திகள்
பொங்கலுக்கு 24,708 சிறப்புப் பேருந்துகள், ஜனவரி 9-ல் முன்பதிவு மையம் திறப்பு: அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்
பொங்கள் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பொங்கள் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது குறித்து இன்று மாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்குப்பின் அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர் கூறுகையில் ‘‘பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு முழுவதும் 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 14,263 பேருந்துகள் இயக்கப்படும். இந்த சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் ஜனவரி 9-ந்தேதி திறக்கப்படும். பொங்கல் முடிந்து சென்னைக்கு திரும்புவதற்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
இந்த கூட்டத்திற்குப்பின் அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர் கூறுகையில் ‘‘பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு முழுவதும் 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 14,263 பேருந்துகள் இயக்கப்படும். இந்த சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் ஜனவரி 9-ந்தேதி திறக்கப்படும். பொங்கல் முடிந்து சென்னைக்கு திரும்புவதற்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.