செய்திகள்

போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதி பெண் பலி

Published On 2018-12-21 15:58 GMT   |   Update On 2018-12-21 15:58 GMT
போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்துள்ள தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தர்மன். விவசாயியான இவரது மனைவி பழனியம்மாள் (வயது50). இவர்கள் இருவரும் நேற்று உறவினர் துக்க நிகழ்ச்சிக்காக ஆனந்தூரை அடுத்துள்ள சின்னசெங்கரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மாவத்தூர் கூட்டுரோடு அருகே செல்லும் போது எதிரே பால்லோடு ஏற்றி வந்த மினிவேன் எதிர் பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்டு பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தர்மனை மீட்டு அக்கம் பக்கத்தினர் போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு விபத்தில் பலியான பழனியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News