செய்திகள்

எட்டயபுரம் அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-12-17 13:55 GMT   |   Update On 2018-12-17 13:55 GMT
எட்டயபுரம் அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள நடுவர்பட்டி சண்முக முதலியார் தெருவை சேர்ந்தவர் அனந்தப்பன் (வயது54). இவர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் சேகர், தனிப்பிரிவு காவலர் கார்த்திக் மற்றும் போலீசார் விரைந்து சென்று அனந்தப்பன் உடலை கைப்பற்றி எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News