திருமண ஆசை காட்டி கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
ஆண்டிப்பட்டி:
சின்னமனூர் அருகே உள்ள கீழப்பூலாந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேல் (வயது 23). இவர் ஆண்டிப்பட்டியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் தேனி அரண்மனைப் புதூரைச் சேர்ந்த மாணவியும் படித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்துள்ளனர்.
மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி கிருஷ்ணவேல் அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி கிருஷ்ணவேலிடம் வற்புறுத்தியுள்ளார். இருவரும் வெவ்வேறு பிரிவு என்பதால் கிருஷ்ணவேல் திருமணத்துக்கு மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார்.
எஸ்.பி. உத்தரவின் பேரில் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணவேலை கைது செய்தனர்.