செய்திகள்

காவேரிப்பட்டணத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-12-12 14:37 GMT   |   Update On 2018-12-12 14:37 GMT
காவேரிப்பட்டணத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவேரிபட்டணம்:

காவேரிபட்டணம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரகு(42). நிப்பட் என்னும் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடன் விக்னேஷ் (20) என்ற வாலிபர் அதே கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் வேலையை முடித்துவிட்டு இருவரும் நேற்று இரவு அங்கேயே தங்கியுள்ளனர்.

நள்ளிரவு 2.30 மணி அளவில் ரகு எழுந்து பார்க்கும்போது விக்னேஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனை கண்ட ரகு அதிர்ச்சி அடைந்தார். 

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து  விக்னேஷின் உடடை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தற்போது வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News