செய்திகள்

தருமபுரி அருகே வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி

Published On 2018-12-12 14:30 GMT   |   Update On 2018-12-12 14:30 GMT
தருமபுரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் மல்லிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் என்கிற சின்னபையன் (35), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சரஸ்வதி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

இவர் நேற்று இரவு தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக மோட்டார் சைக்கிளில் காரிமங்கலத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது பைசுஅள்ளியில் உள்ள சர்ச் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வேகமாக வந்து அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முனியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் உடனே அங்கு சென்று முனியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News