செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் ஜெயலலிதா படத்துக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை

Published On 2018-12-05 12:17 GMT   |   Update On 2018-12-05 12:17 GMT
திருப்பரங்குன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #ADMK
திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. புறநகர் மாவட்டம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

16 கால் மண்டபத்தில் ஜெயலலிதாவின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், துணைச் செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் முனியாண்டி, மோகன்தாஸ், அக்பர் அலி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி ரவி, வட்டச்செயலாளர் பொன்முருகன், பாலமுருகன், கர்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலையூர் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பூமிபாலன், ஒன்றிய துணைச் செயலாளரும், கூத்தியார்குண்டு கூட்டுறவு தலைவருமான நிலையூர் முருகன் ஆகியோர் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் நிர்வாகிகள் டி.வி.ஆலடி, மாரி, கருப்பு ,முருகன், திருநாவுக்கரசு, ஜி.முருகன் முத்துமாரி,பி.ஆலடி, வேல்முருகன், தண்டபாணி, சோனைமுத்து, மலைச்சாமி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #ADMK
Tags:    

Similar News