செய்திகள்
சேலத்தில் ஒரே நாளில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பேர் பலி
சேலத்தில் ஒரே நாளில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகினர். சுகாதார குழுவினர் இப்பகுதியில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். #Swineflu
சேலம்:
சேலம் குகை சிவனார் தெரு பகுதியை சேர்ந்தவர் ரெத்தினம்மாள் (வயது39). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
அங்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றும் உடல் நிலையில் எந்த முன்னேறமும் இல்லாததால் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.
மற்றொரு சம்பவம்...
சேலம் அன்னதானப்பட்டி ஸ்ரீரங்கன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகனார் (வயது 75). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 10 நாட்களாக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதனால் சுகாதார குழுவினர் அந்த பகுதியில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். #Swineflu
சேலம் குகை சிவனார் தெரு பகுதியை சேர்ந்தவர் ரெத்தினம்மாள் (வயது39). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
அங்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றும் உடல் நிலையில் எந்த முன்னேறமும் இல்லாததால் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.
மற்றொரு சம்பவம்...
சேலம் அன்னதானப்பட்டி ஸ்ரீரங்கன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகனார் (வயது 75). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 10 நாட்களாக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதனால் சுகாதார குழுவினர் அந்த பகுதியில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். #Swineflu