செய்திகள்

திண்டுக்கல்லில் திருட்டு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது

Published On 2018-12-01 09:56 GMT   |   Update On 2018-12-01 09:56 GMT
திண்டுக்கல்லில் திருட்டு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் குட்டை குளத்தைச் சேர்ந்தவர் கலீல் (வயது 24). கடந்த 2015-ம் ஆண்டு இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்காக கோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கலீலுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் திண்டுக்கல் - வத்தலக்குண்டு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக ஒரு வாலிபர் சுற்றித் திரிந்துள்ளார்.

அவரை பிடித்து விசாரித்த போது திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த கலீல் என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News