செய்திகள்
டெல்லியில் விவசாயிகள் போராட்டம்- பிரதமர் மோடிக்கு கனிமொழி கண்டனம்
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனிமொழி எம்.பி. டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். #FarmersProtest #Kanimozhi #PMmodi
சென்னை:
பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி சென்று ஏற்கனவே அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்கள். இப்போது அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் பாராளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். இதில் தமிழக விவசாயிகள் உள்ளிட்ட பலர் அரை நிர்வாணமாக ஊர்வலத்தில் கோஷம் எழுப்பியபடி சென்றனர்.
தமிழக விவசாயிகள் டெல்லி வீதியில் நிர்வாண போராட்டம் நடத்தியபோதே பிரதமர் ஓடிவந்து ஆறுதல் என்னும் ஒற்றைத்துணி கொண்டு மூடி மறைக்காததன் விளைவு இன்று இந்திய அளவில் 5 லட்சம் விவசாயிகள் நிர்வாண ஊர்வலத்தில் வந்து நிற்கின்றது.
விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகின்றது.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார். #FarmersProtest #Kanimozhi #PMModi
பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி சென்று ஏற்கனவே அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்கள். இப்போது அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் பாராளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். இதில் தமிழக விவசாயிகள் உள்ளிட்ட பலர் அரை நிர்வாணமாக ஊர்வலத்தில் கோஷம் எழுப்பியபடி சென்றனர்.
இதுபற்றி கனிமொழி எம்.பி. டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து வருமாறு:-
விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகின்றது.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார். #FarmersProtest #Kanimozhi #PMModi