search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PM Modi"

    • பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் பா.ஜனதா பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
    • முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடக பா.ஜனதா தலைவர் விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் பாராளுமன்ற தேர்தல் 2 கட்டமாக வருகிற 26, மே 7-ந்தேதி நடைபெற உள்ளது. பெங்களூரு உள்பட அதனை சுற்றியுள்ள 14 தொகுதிகளில் இந்த முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் களத்தில் 247 பேர் உள்ளனர். இந்த தொகுதிகளில் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி 3 முறை கர்நாடகம் வந்து பிரசார பொதுக்கூட்டம், வாகன பேரணியில் பங்கேற்று உள்ளார். கலபுரகி, சிவமொக்கா, மைசூரு, மங்களூரு ஆகிய நகரங்களில் அவர் வாக்கு சேகரித்தார். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி 4-வது முறையாக அவர் மீண்டும் இன்று (சனிக்கிழமை) கர்நாடகம் வருகிறார்.

    சிறப்பு விமானம் மூலம் கர்நாடகம் வரும் பிரதமர், சிக்பள்ளாப்பூரில் நடைபெறும் பா.ஜனதா பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதை முடித்துக் கொண்டு அவர் மாலை 6 மணியளவில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் பா.ஜனதா பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    இதில் பெங்களூருவில் உள்ள 4 தொகுதிகளின் வேட்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடக பா.ஜனதா தலைவர் விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூரு மற்றும் சிக்பள்ளாப்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியை தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 23, 24-ந்தேதி ஓட்டு வேட்டையில் ஈடுபடுகிறார்.

    24-ந்தேதி உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சிக்கமகளூரு, உடுப்பி உள்ளிட்ட நகரங்களில் வாக்கு சேகரிக்கிறார்.

    • யூடியூப் சேனலை பகிர்ந்து கொண்டு அனைவரும் குழுவில் சேரும்படி கேட்டு கொண்டார்.
    • ரோஹித் குமார் கூறிய புகார்கள் உண்மையா என்றும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மெல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரோஹித் குமார். இவர் பிரதமர் மோடியை புகழ்ந்து ஒரு பாடலை இயற்றியுள்ளார். இந்த பாடலை தனது யூடியூப்பில் பகிர்ந்து உள்ளார். மேலும் அந்த யூடியூப் சேனலை பகிர்ந்து கொண்டு அனைவரும் குழுவில் சேரும்படி கேட்டு கொண்டார். அப்போது அவரை தொடர்பு கொண்ட ஒரு நபரிடம் பாடலை பகிரவும், யூடியூப் சேனல் குழுவில் சேரவும் கேட்டு கொண்டார்.

    ரோஹித் குமார் பாடிய பாடலை பாராட்டிய அந்த நபர் தனது நண்பர்களை சந்திக்கலாம் என்று கூறி அழைத்து சென்று உள்ளார். பின்னர் அங்கு ஒரு கும்பல் அறைக்குள் வைத்து ரோஹித் குமாரை சரமாரியமாக அடித்து உதைத்து உள்ளனர். பின்னர் அந்த நபர்கள் ரோஹித் குமார் மீது சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது.

    அவர்களிடம் இருந்து தப்பி வந்த ரோஹித் குமார் இது குறித்து மைசூரு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரோஹித் குமார் தாக்கப்பட்ட இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், ரோஹித் குமார் கூறிய புகார்கள் உண்மையா என்றும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும். அதுவே இந்திய நாட்டுக்கு நன்மை பயக்கும்.
    • அனைவரும் சமத்துவம், சகோதரத்துவத்துடன் வாழ தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் .

    திண்டிவனம்:

    திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீமரகதாம்பிகை அரசு உதவி பெறும் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை 8 மணிக்கு தனது வாக்கைப்பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும். அதுவே இந்திய நாட்டுக்கு நன்மை பயக்கும். அனைவரும் சமத்துவம், சகோதரத்துவத்துடன் வாழ தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் .

    பேட்டியின் போது மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார், பா.ம.க. விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜெயராஜ், முன்னாள் நகர செயலர் சண்முகம், வக்கீல் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • நாடு முழுவதும் இன்று 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.
    • ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது!

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பிரதமர் மோடி அனைவரும் வாக்களிக்க வருமாறு குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த முறை கர்நாடகா மாநிலத்தில் 25 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
    • தெலுங்கானாவில் 4 இடங்களில் வென்றிருந்தது.

    பா.ஜனதா கூட்டணி 400 இலக்கை நிர்ணயித்து மக்களவை தேர்தலை சந்தித்து வருகிறது. தனியாக 370 இலக்கை நிர்ணயித்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரசாரத்தின்போது இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் பா.ஜனதா 200 இடங்களை கூட தாண்டாது எனக் கூறி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி 15 இடங்களுக்கும் குறைவாகத்தான் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இந்த முறை தென்மாநிலங்களில் எங்களுடைய செயல்பாடு சிறப்பானதாக இருக்கும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-

    கிழக்கு, மேற்கு, வடக்கு அல்லது தெற்கு என எங்கும் 400 இடங்களுக்கு மேல் நாங்கள் பெறுவோம் என்று நாட்டின் சூழல் தெரிவிக்கிறது. தெற்கில் இதுவரை இல்லாத வகையில் இந்த முறை செயல்பாடு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

    பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டில் நம்பிக்கையும், உற்சாகமும் நிறைந்த சூழல் நிலவுகிறது. விவசாயிகள், பெண்கள், ஏழைகள், இளைஞர்கள் பிரதமர் மோடி நம்பிக்கை வைத்துள்ளனர். அவருக்கு ஆதரவு கொடுப்பது பற்றி ஆர்வமாக உள்ளனர்.

    நாட்டின் பாதுகாப்பையும் வளத்தையும் உறுதிப்படுத்த மோடிக்கு பெரும்பான்மையான 400 இடங்களை வழங்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    கடந்த மக்களவை தேர்தலின்போது பா.ஜனதா கர்நாடகா மாநிலத்தில் 25 இடங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரியில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.

    • தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்.
    • உங்களைப் போன்ற அணியினர் எனக்கு பெரும் சொத்து.

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், "இது சாதாரண தேர்தல் அல்ல, மக்களின் ஆசீர்வாதத்துடன், பா.ஜனதா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெற்று, பாராளுமன்றத்தில் அடியெடுத்து வைப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக" குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, வேட்பாளர்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரையும் வாழ்த்தியுள்ளார்.

    கோவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில், "எனது சக காரியகர்த்தாவுக்கு. ராம நவமியின் நன்னாளில் கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்... ஒரு மதிப்புமிக்க வேலையை விட்டுவிட்டு நேரடியாக மக்களுக்கு சேவை செய்ய முடிவெடுத்ததற்கு உங்களை வாழ்த்துகிறேன். தமிழகம் முழுவதும் பா.ஜனதாவின் அடிமட்ட இருப்பை வலுப்படுத்தவும், சட்ட அமலாக்கம், நிர்வாகம் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளை முன்னிறுத்துவதில் நீங்கள் உண்மையிலேயே முக்கிய பங்காற்றியுள்ளீர்கள். உங்கள் அர்ப்பணிப்புள்ள தலைமையால் கோவைக்கு மகத்தான பலன் கிடைக்கும்.

    "மக்களின் ஆசியுடன், நீங்கள் பாராளுமன்றத்தை அடைவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களைப் போன்ற அணியினர் எனக்கு பெரும் சொத்து. ஒரு அணியாக, தொகுதி மக்களின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பாடுபடுவோம்" என்று அதில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • 60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாததை நாங்கள் 10 ஆண்டுகளில் செய்தோம்.
    • அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான முயற்சிகளை பா.ஜனதா மேற்கொண்டது.

    கவுகாத்தி:

    பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை அசாம் மாநிலம் நல்பாரியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்று வரலாற்று சிறப்புமிக்க ராம நவமி விழாவாகும். 500 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு ராமர் இறுதியாக தனது பிரமாண்ட கோவிலில் அமர்ந்தார்.

    புனித நகரமான அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ராமருக்கு சூரிய திலகம் பூசி கொண்டாடப்பட்டது.

    நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்கு தகுதியான வசதிகளை வழங்க தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் இவை கிடைக்கும்.

    70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளேன். எந்த பாரபட்சமும் இல்லாமல் சிசிக்சை மேற்கொள்ளப்படும்.

    இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு மாநிலங்களே சாட்சி.

    காங்கிரஸ் கட்சியால் வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரச்சனைகள் மட்டுமே கொடுக்க முடிந்தது. காங்கிரஸ் பிரிவினைவாதத்தை தூண்டியது. அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான முயற்சிகளை பா.ஜனதா மேற்கொண்டது.

    60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாததை நாங்கள் 10 ஆண்டுகளில் செய்தோம்.

    எல்லோருக்கும் எல்லாம் என்ற மந்திரத்தை பின்பற்றும் கட்சி பா.ஜனதா. 2014-ல் நம்பிக்கையையும், 2019-ல் உறுதியான உணர்வையும் கொண்டு வந்தேன். 2024-ம் ஆண்டு உத்தரவாதத்தை கொண்டு வருகிறேன். இது மோடியின் கேரண்டி.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    கூட்டத்தின் போது அவர் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டார். கூடி இருந்தவர்களும் பதில் முழக்கமிட்டனர்.

    • நானா, நானி என்ற முதியோர் இல்லத்திற்கு சென்றார்.
    • பாராளுமன்ற தேர்தல் பரப்புரை காரணமாக உங்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது.

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள நானா, நானி என்ற முதியோர் இல்லத்திற்கு சென்றார். அவர்கள் அவருக்கு மாலை அணிவித்து, பூரண கும்ப மரியாதையும் அளித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:-

    நான் இங்கு உங்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக வரவில்லை. உங்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். கடந்த ஒரு வருடகாலமாகவே உங்களை சந்திக்க வேண்டும். உங்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தேன்.

    இருப்பினும் என் மண், என் மக்கள் யாத்திரை, பாராளுமன்ற தேர்தல் பரப்புரை காரணமாக உங்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது. இறுதிகட்ட பிரசாரமான நாளை எங்கும் செல்லக்கூடாது. உங்களை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதன்படி உங்களை பார்ப்பதற்காகவே இன்று வந்துள்ளேன். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். மற்றொரு நாளில் உங்களை வந்து கட்டாயமாக சந்திக்கிறேன் என்றார்.

    இந்த வார்த்தையை பேசியபோது, அண்ணாமலை திடீரென கண் கலங்கி விட்டார். இதனை பார்த்த முதியோர்கள் அவரை ஆறுதல் படுத்தினர். ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பி அவருக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தினர்.

    • மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் விளையவில்லை.
    • தி.மு.க. அரசின் சாதனை என்று சொல்லிக் கொள்வதற்கு ஒன்று கூட இல்லை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான் மத்தியில் மீண்டும் அமைய வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம் ஆகும். இந்தியா முழுவதும் வீசும் அதே மோடி ஆதரவு அலை தான் தமிழ்நாட்டிலும் வீசுகிறது. தமிழகத்தின் பெரும் பான்மையான பகுதிகளுக்கு பரப்புரை சென்று வந்ததன் மூலம் மோடி ஆதரவு அலையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் 90 விழுக்காடு தமிழ்நாட்டு மக்கள் தங்களின் வாக்கு யாருக்கு? என்பதை முடிவு செய்து விட்டார்கள்.

    கடந்த பத்தாண்டுகளில் 2014-ம் ஆண்டில் தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த 37 உறுப்பினர்களும், 2019-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அணியைச் சேர்ந்த 38 உறுப்பினர்களும் சமூக நீதிக்காகவோ, தமிழக நலன்களுக்காகவோ குரல் கொடுக்கவில்லை.

    பா.ம.க. போட்டியிடும் 10 இடங்களிலும் வெற்றி பெற்றால் தான் தமிழகத்தின் குரல் பாராளுமன்றத்தில் வலிமையாக ஒலிக்கும்; உரிமைகள் கிடைக்கும்.


    மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் விளையவில்லை. மாறாக, மின்கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, மோட்டார் வாகன வரி உயர்வு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, 10 முறை பால் விலை உயர்வு ஆகியவை தான் வாக்களித்த மக்களுக்கு தி.மு.க. அரசு அளித்த பரிசு ஆகும். தி.மு.க. அரசின் சாதனை என்று சொல்லிக் கொள்வதற்கு ஒன்று கூட இல்லை. வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்பதில் இருந்தே மக்களை தி.மு.க. அரசு மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது. மக்களை மதிக்காத தி.மு.க.வுக்கு மக்கள் அளிக்க வேண்டிய சரியான தண்டனை தோல்வி தான். அதை தி.மு.க.வுக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.

    தமிழக வாக்காளர்களுக்கு ஒரே தேர்தலில் இரு இலக்குகளை சாதிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மத்தியில் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான நல்லாட்சியை மீண்டும் ஏற்படுத்துவது, தமிழ் நாட்டில் மக்களை வாட்டும் தி.மு.க. அரசை தண்டிப்பது ஆகியவை தான் அந்த இரு இலக்குகள். இந்த இலக்குகளை சாதிக்க நாளை மறுநாள் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பா.ம.க., பாஜக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளுக்கு மாம்பழம், தாமரை, சைக்கிள், குக்கர், பலாப்பழம் ஆகிய சின்னங்களில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்; அதன்மூலம் தமிழ்நாட்டை தீமைகளில் இருந்து மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் உரிமைகளைவென்றெடுக்கவும் வகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதி மற்றும் அமைதியை நோக்கி நமது பாதைகளை வழிநடத்தட்டும்.
    • இந்த புனிதமான நோக்கத்திற்காக எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.

    ராம நவமி 2024: ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. ராம நவமியின் புனித திருவிழா இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாள் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.

    ராம நவமியை முன்னிட்டு அயோத்தியா ராமர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அயோத்தியில் ராமர் பிரதிஷ்டைக்குப் பிறகு முதல் ராம நவமி ஒரு தலைமுறை மைல்கல் ஆகும். இது நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்துடன் பல நூற்றாண்டுகளின் பக்தியை ஒன்றிணைக்கிறது.

    கோடிக்கணக்கான இந்தியர்கள் காத்திருக்கும் நாள் இது. இந்த புனிதமான நோக்கத்திற்காக எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.

    பிரபு ஸ்ரீராமின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருந்துகொண்டு, நம் வாழ்வில் ஞானத்துடனும் தைரியத்துடனும் ஒளியூட்டி, நீதி மற்றும் அமைதியை நோக்கி நமது பாதைகளை வழிநடத்தட்டும்.

    ராமர் இந்தியாவின் நம்பிக்கை, ராமர் இந்தியாவின் அடித்தளம்...

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பெண்கள், இளைஞர்களிடையேயும், எளிய மக்களிடத்திலும் பா.ஜனதாவிற்கான ஆதரவு அதிகரித்துள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகன பிரசாரத்தின்போது விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள பா.ஜனதா தேர்தல் அலுவலகத்தில், வடசென்னை பாராளுமன்றத் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பால் கனகராஜ் வடசென்னை தொகுதிக்கான தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். நிகழ்ச்சிக்கு, தமிழக பா.ஜனதா மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலை வகித்தார்.

    பின்னர், சுதாகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பா.ஜனதாவிற்கும், பா.ஜனதா வேட்பாளர்களுக்கும் மிகச்சிறப்பான ஆதரவு கிடைத்து வருகிறது. குறிப்பாக பெண்கள், இளைஞர்களிடையேயும், எளிய மக்களிடத்திலும் பா.ஜனதாவிற்கான ஆதரவு அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்திற்கு வருகை தரும்போதும், பொதுக்கூட்டங்கள் மற்றும் வாகன பிரசாரத்தில் ஈடுபடும் போதும் ஏராளமான மக்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து வருகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் பா.ஜனதாவில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் அதிகளவிலான வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.பி.க்களாக பாராளுமன்றம் செல்வார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகன பிரசாரத்தின்போது விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பிரதமர் மோடியின் வாகன பிரசாரத்தின்போது விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு ஒரு சட்டம், பிரதமருக்கு ஒரு சட்டமா?. தி.மு.க.வுக்கு வாக்கு வங்கி அரசியல் தான் முக்கியம். பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் கூறியதை கண்டிப்பாக நிறைவேற்றுவார். தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிருஷ்ணகிரி வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்தார்.
    • நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் பிரதமர் மோடி என்றார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் பேசியதாவது:

    ஆலயங்களின் மாநிலமான தமிழகம் வரும்போது மனம் அமைதி கொள்கிறது.

    பார்லிமென்டில் செங்கோல் வைத்ததன் மூலம் தமிழ் கலாசாரம் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் என்று பேசப்படும் போது நம் நினைவுக்கு வருவது செங்கோல் தான்.

    இன்டர்நெட்டில் ஏற்பட்ட புரட்சியால் யுபிஐ சேவை தற்போது அதிகரித்துள்ளது.

    2014-ம் ஆண்டுக்கு பிறகு மருத்துவ வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. நாடுமுழுவதும் புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.

    பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் முதல் 25 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

    ஐக்கிய நாடுகள் அவையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக்கூறி தமிழின் பெருமையை மோடி உயர்த்தியுள்ளார்.

    நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் பிரதமர் மோடி.

    நாடு முழுவதும் தமிழ் மொழியைக் கொண்டு செல்ல பிரதமர் மோடி பாடுபடுகிறார் என தெரிவித்தார்.

    ×