செய்திகள்
மதுரை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
மதுரை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி விக்கிரமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி (வயது27). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.
இவர் பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்ட ஜெயபாண்டியை அக்கம் பக்கத்தினர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் ஜெயபாண்டி வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக ஜெயபாண்டி தாய் பாப்பம்மாள் அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.