செய்திகள்
சேந்தமங்கலம் அருகே, பூட்டை உடைத்து லாரி டிரைவர் வீட்டில் நகை, பணம் திருட்டு
சேந்தமங்கலம் அருகே, லாரி டிரைவர் வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூரை சேர்ந்தவர் பங்காரு (வயது 50), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் நேற்று காலை அவர் வீட்டுக்கு வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரி டிரைவர் வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூரை சேர்ந்தவர் பங்காரு (வயது 50), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் நேற்று காலை அவர் வீட்டுக்கு வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரி டிரைவர் வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.