செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் தொழிலாளி தற்கொலை

Published On 2018-11-05 09:40 GMT   |   Update On 2018-11-05 09:40 GMT
மேட்டுப்பாளையத்தில் மதுபழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

புதுவை மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார் (வயது62), கூலித்தொழிலாளி. இவருக்கு பவானி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். 2 மகன்களும் திருமணமாகி ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுபழக்கம் உள்ள அய்யனார் தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த 3 நாட்களாக அளவுக்கு அதிகமாக மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். நேற்றும் அதுபோல அதிகமாக மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அய்யனார் அங்கு மனைவி பவானியிடம் தகராறு செய்தார்.

இதையடுத்து பவானி இதுபற்றி தனது மகன் உமாசங்கரிடம் முறையிட அருகில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். இதனால் மனமுடைந்த அய்யனார் வீட்டின் மாடியில் உள்ள ஆஸ்பெட்டால் கூரையில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார்.

சிறிது நேரம் கழித்து பவானி தனது மருமகளுடன் வீட்டுக்கு வந்த போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அய்யனார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இனியன், குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News