செய்திகள்

அறிவிக்கப்படாத மின்வெட்டு- ஊத்துக்கோட்டை நகரம் இருளில் மூழ்கியது

Published On 2018-10-28 11:57 GMT   |   Update On 2018-10-28 11:57 GMT
அறிவிக்கப்படாத மின்வெட்டால் ஊத்துக்கோட்டை நகரம் இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டையில் 11 கிலோ வாட் துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து ஊத்துக்கோட்டையில் உள்ள சுமார் 5 ஆயிரம் வீடுகள், வனிக நிறுவனங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் தராட்சி, பால்ரெட்டி கண்டிகை, கீழ்சிற்ற பாக்கம், கீழ்சிற்ற பாகம், ஜங்காலபள்ளி, தொம்பரம்பேடு, தாராட்சி உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும், விவசாய பம்ப் செட்டுகளுக்கு மின் வினியோகம் நடைபெற்று வருகிறது.

கடந்த ஒரு வாரமாக ஊத்துக்கோட்டை உள்ளிட்ட மேற்கூறபட்ட 50 கிராமங்களில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் அவதிப்படு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி முதல் இரவு 12 மணி வரை அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மின்தடை காரணமாக இண்டர்நெட் சேவை பாதிக்கப்பட்டதால் அரசு அலுவலகங்ளில் தகவல் பறிமாற்றம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் ஊத்துக்கோட்டையில் உள்ள துணை மின் நிலையத்துக்கு புகார் கூற சென்றனர். ஆனால் அங்கு அதிகாரிகள் யாரும் இல்லாதால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ஊத்துக்கோட்டை பகுதியில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News