செய்திகள்

மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி - நிவாரணம் வழங்கக்கோரி கோவை கலெக்டர் அலுவலகம் முற்றுகை

Published On 2018-10-27 16:40 GMT   |   Update On 2018-10-27 16:40 GMT
காமநாயக்கன்பாளையம் அருகே மின் கம்பத்தில் உள்ள தெருவிளக்கை சரி செய்தபோது மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் இறந்தார். நிவாரணம் வழங்கக்கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
காமநாயக்கன்பாளையம்:

காமநாயக்கன்பாளையம் அருகே உள்ள கோவில் பாளை யம் லட்சுமிநகரை சேர்ந்த முத்தான் என்பவரது மகன் வீரக்குமார் (வயது 27). இவர் பொங்கலூரில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காட் டூர் அருகே வெள்ளநத்தம் ஆதிதிராவிடர் காலனி பகுதி யில் உள்ள மின்கம்பத்தில் ஏறி, மின்விளக்கை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீரக் குமார் மீது மின்சாரம் பாய்ந் தது. இதில் மின்கம்பத் தில் இருந்து வீரக்குமார் தவறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரக்குமார் இறந் தார். இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்வாரிய ஊழியர் மின்சாரம் பாய்ந்து இறந்து சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற் படுத்தி உள்ளது.

இதற்கிடையே வீரக் குமாரின் உடலை பார்க்க மின்வாரிய அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் அவருடைய இறப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவருடைய மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண் டும்.

மேலும் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு அரசு அறிவித்து உள்ள கருணைத்தொகை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கோவை அரசு ஆஸ்பத்திரியில் உடலை வாங்க மறுத்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி னர். இதனை தொடர்ந்து அவர்கள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News