செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 24 ஆயிரத்து 764 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணை நீர்மட்டம் 104 அடியாக இருக்கும் நிலையில், மேலும் 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், இனிவரும் நாட்களில் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.
சேலம்:
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
கடந்த 17-ந்தேதி 10 ஆயிரத்து 42 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 18 ஆயிரத்து 86 கனஅடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 24 ஆயிரத்து 764 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து 13ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், 700 கனஅடி கால்வாய் பாசனத்திற்கும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று 103.37 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 104.07 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரேநாளில் அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணை நீர்மட்டம் ஏற்கனவே 104 அடியாக இருக்கும் நிலையில், மேலும் 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
கடந்த 17-ந்தேதி 10 ஆயிரத்து 42 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 18 ஆயிரத்து 86 கனஅடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 24 ஆயிரத்து 764 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து 13ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், 700 கனஅடி கால்வாய் பாசனத்திற்கும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று 103.37 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 104.07 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரேநாளில் அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணை நீர்மட்டம் ஏற்கனவே 104 அடியாக இருக்கும் நிலையில், மேலும் 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.