செய்திகள்

நிதி நிறுவன ஊழியரிடம் பணத்தை கொள்ளையடித்த மேலும் 2 பேர் கைது

Published On 2018-10-17 10:19 GMT   |   Update On 2018-10-17 10:19 GMT
புதுவையில் நிதி நிறுவன ஊழியரிடம் பணத்தை கொள்ளையடித்த மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

மதுராந்தகத்தில் வெங்கடேஸ்வரா நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் புதுவையை சேர்ந்த வியாபாரிகள், தொழில் அதிபர்கள் பலர் கடன் வாங்கி இருந்தனர்.

நேற்று முன்தினம் அவற்றை வசூல் செய்வதற்காக நிறுவன ஊழியர் பாலசுப்பிரமணியன் புதுவை வந்தார்.

அவர் எல்லைப்பிள்ளை சாவடியில் சென்ற போது ஒரு கும்பல் அவரை அரிவாளால் தாக்கி ரூ. 4 லட்சத்து 75 ஆயிரம் பண பையை பறித்து சென்றது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சரவணன், மதுபாலா, அஜித், கந்தவேல் ஆகியேரை கைது செய்தனர்.

இந்த கொள்ளைக்கு திட்டம் வகுத்து கொடுத்த கல்மேடுபட்டை சேர்ந்த சுதன் போலீசில் சரண் அடைந்தார்.

மேலும் அய்யங்குட்டி பாளையத்தை சேர்ந்த சுகன், கீர்த்தி ஆகியோரும் கொள்ளையில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவர்களை இன்று போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News