செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

Published On 2018-10-17 09:59 GMT   |   Update On 2018-10-17 09:59 GMT
ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்த பயன் படுத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் காலிக் குடங்களுடன் அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மூல வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஓடை உள்ளிட்ட நீர் நிலைகளில் மணல் கடத்தப்பட்டு வருகிறது. கண்டமனூர் சப்- இன்ஸ்பெக்டர் சுல்தான் பாட்ஷா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது வேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர். லாரியை சோதனையிட்டபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து முத்தனம்பட்டியைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News