செய்திகள்

முத்துப்பேட்டை அருகே கள்ளச்சாராய தொழிற்சாலை நடத்திய கும்பல் தப்பி ஓட்டம் - போலீசார் விசாரணை

Published On 2018-10-13 11:35 GMT   |   Update On 2018-10-13 11:35 GMT
முத்துப்பேட்டை அருகே கள்ளச்சாராய தொழிற்சாலை நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியில் இரண்டு இடங்களில் தொழிற்சாலை அமைத்து சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சு வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியில் உள்ள வெட்டிக்காடு என்ற இடத்தில் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.

இதில் வீரசிங்கம் என்பவரது தென்னந் தோப்பில் கள்ளச்சாராயம் தொழிற்சாலை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோடினர். இதில் 480லிட்டர் ஊறல், 10லிட்டர் எரித்த சாராயம், 1000ரூபாய் ரொக்கம், 8பேரல்கள் மற்றும் அதற்கான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வீரசிங்கத்தை தேடி வருகின்றனர்.

அதேபோல் அதேபகுதியை சேர்ந்த சிவசுந்தரம் என்பவரின் தென்னந்தோப்பில் கள்ளச் சாராயம் தொழிற்சாலை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோடினர். இதில் 240லிட்டர் ஊரல், 220லிட்டர் எரித்த சாராயம், 300ரூபாய் ரொக்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து சிவசுந்தரத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News