செய்திகள்

சிங்காநல்லூர் அருகே ரெயில் மோதி வாலிபர் பலி

Published On 2018-10-13 09:41 GMT   |   Update On 2018-10-13 09:41 GMT
கோவை சிங்காநல்லூர் அருகே ரெயில் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:

கோவை சிங்காநல்லூர்- இருகூர் ரெயில் தண்டவாளம் இடையே ரெயிலில் அடிபட்டு ஒரு வாலிபர் இறந்து கிடந்தார். இது குறித்து அந்த பகுதிமக்கள் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் ஏசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ரெயிலில் அடிபட்டு இறந்த வாலிபர் ஈரோடு மாவட்டம் கொல்லன் கோவில் கந்தசாமிபாளையத்தை சேர்ந்த ஸ்டீபன்துரை என்பவரின் மகன் ராஜ்குமார் (வயது 30) என்பதும் கோவை பீளமேடு பகுதியில் அறை எடுத்து தங்கி ஒரு கார் கம்பெனியில் கார் விற்பனை பிரதிநிதியாக இருந்தார் என்பது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News