செய்திகள்
திண்டுக்கல் அருகே ஸ்டவ் வெடித்து இளம்பெண் பலி
திண்டுக்கல் அருகே ஸ்டவ் வெடித்து இளம்பெண் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள குளத்தூர் இந்திரா காலனியை சேர்ந்த சஞ்சீவ்காந்தி மனைவி லிங்கம்மாள் (32). இவர் நேற்று இரவு தனது வீட்டில் மண்எண்ணை அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண்எண்ணை கீழே சிந்தி தீ பிடித்தது. இதில் லிங்கம்மாள் உடலில் தீ பற்றியது.
பலத்த காயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இன்று காலை பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.