செய்திகள்

தொடரும் கன மழை - 61 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்

Published On 2018-10-08 12:30 GMT   |   Update On 2018-10-08 12:30 GMT
நீர்பிடிப்பு பகுதியில் கன மழை தொடருவதால் வைகை அணை நீர்மட்டம் 61 அடியை எட்டியுள்ளது.
கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணை மற்றும் வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 5 நாட்களில் அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.50 அடியாக உள்ளது. 3746 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1906 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்தடைகிறது. மேலும் மூலவைகையாற்று பகுதியில் மழை தொடர்கிறது.

இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து 2350 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1190 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 60.96 அடியாக உள்ளது. இதே ஆண்டில் மீண்டும் முழு கொள்ளளவை எட்டுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48 அடியாக உள்ளது. அணைக்கு 135 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.40 அடியாக உள்ளது. 163 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 12, தேக்கடி 10.4, கூடலூர் 2.6, உத்தமபாளையம் 2, வீரபாண்டி 27, வைகை அணை 44.6, மஞ்சளாறு 13, சோத்துப்பாறை 48, கொடைக்கானல் 2.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News