செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

Published On 2018-10-08 06:36 GMT   |   Update On 2018-10-08 06:36 GMT
ஒகேனக்கல்லுக்கு நேற்று 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று குறைந்து 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஒகேனக்கல்:

கடந்த சில நாட்களாகவே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது.

நேற்று 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று குறைந்து 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விடுமுறை நாளான நேற்றும், நேற்று முன்தினமும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இன்று மகாளய அமாவாசை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. தர்ப்பணம் மற்றும் திதி கொடுக்க வந்தவர்களும் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளும், காவிரி ஆற்றிலும் குளித்தனர்.

வழக்கமாக ஒகேனக்கல்லில் மீன் விற்பனை அதிகமாக இருக்கும். இன்று பூக்கள் மற்றும் தேங்காய், பழம் விற்பனை அதிகமாக இருந்தது.

Tags:    

Similar News