செய்திகள்

தினகரன் - ஓ.பி.எஸ். பெரிய ஊழல் பேர்வழிகள் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தாக்கு

Published On 2018-10-07 14:19 GMT   |   Update On 2018-10-07 14:19 GMT
டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் மிகப் பெரிய ஊழல் பேர்வழிகள் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான சஞ்சய் தத் தலைமை தாங்கினார். இதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி. தங்கபாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது-

காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி என்பது 100 சதவீதம் உறுதியாகி விட்டது. இந்த கூட்டணி இந்திரா காந்தி முதல் ராகுல் காலம் வரை தொடர்கிறது. இக்கூட்டணி தமிழ்நாடு, புதுக்சேரி உள்ளடக்கிய 40 தொகுதிகளிலும் வெற்றி வெறும்.

அமைச்சர்களின் வீடுகளில் மட்டுமல்லாமல் சபாநாயகர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வேண்டும். தினகரனும், ஓ.பி.எஸ்சும் மிகப் பெரிய ஊழல் பேர்வழிகள்.

காங்கிரஸ் ஆட்சியில் 40 ரூபாய்க்கு இருந்த பெட்ரோல் விலை பாரதிய ஜனதா ஆட்சியில் ரூ. 80-க்கு விற்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் பேசியதாவது-

ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. அம்பானி, அதானி போன்ற முதலாளிகளுக்கு சாதகமாக மோடி அரசு செயல்படுகிறது.

மக்கள் என்ன சாப்பிட வேண்டும். என்ன பேச வேண்டும் என்பதையெல்லாம் பாரதிய ஜனதா அரசு ஜனநாயக விரோதமாக முடிவு செய்கிறது. காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி. நாட்டின் ஒற்றுமைக்காக பல தியாகங்களை செய்த கட்சி.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News