செய்திகள்

ஈரானில் சிறை வைக்கப்பட்டுள்ள 6 தமிழக மீனவர்களை மீட்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

Published On 2018-10-05 10:05 GMT   |   Update On 2018-10-05 10:06 GMT
ஈரான் கடலோர பாதுகாப்பு படையினரால் கைதான தமிழக மீனவர்கள் 6 பேரை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #EdappadiPalaniswami #NarendraModi #PMModi
சென்னை :

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் அரபிக் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது கடந்த மாதம் ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் ஈரானில் உள்ள கிஷ் தீவில் ஒரு மாத காலமாக படகிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் 6 பேரையும் ஈரானில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார். #EdappadiPalaniswami #NarendraModi #PMModi
Tags:    

Similar News