செய்திகள்
சின்னமனூர் அருகே 1 லட்சம் மதிப்புள்ள பசு மாடுகள் திருட்டு
சின்னமனூர் அருகே ரூ.1 லட்சம் மதிப்புள்ள பசுமாடுகளை திருடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
சின்னமனூர் அருகே விசுவங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து (வயது 41). இவர் விவசாயம் செய்து வருகிறார். மேலும் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.
இவர் சம்பவத்தன்று தனது இடத்தில் தனக்கு சொந்தமான பசு மாடுகளை கட்டி வைத்திருந்தார். மறு நாள் காலையில் பார்க்கும் போது அதில் 2 பசு மாடுகள் திருடப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். திருடு போன மாடுகளின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இது குறித்து சின்னமனூர் போலீசில் முத்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் பசு மாடுகளை திருடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.