செய்திகள்
வெள்ளகோவிலில் மொபட்டில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
வெள்ளகோவில் அருகே கணவன்-மனைவி மொபட் சென்று கொண்டிருந்தபோது பின்னால் இருந்த தீபா தவறி கீழே விழுந்து பலியானார்.
வெள்ளகோவில்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சேரன்நகரை சேர்ந்தவர் பிரீத்ஜான் நாக்த். மதபோதகர். இவருடைய மனைவி தீபா (வயது 33). இவர்கள் குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அமராவதி நகரில் வசித்து வருகிறார்கள். தீபா காங்கேயத்தில் உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் நேற்று ஒரு மொபட்டில் வெள்ளகோவில் சென்று விட்டு, காங்கேயம் புறப்பட்டனர். மொபட்டை பிரீத்ஜான் நாக்த் ஓட்டினார். பின் இருக்கையில் தீபா அமர்ந்து இருந்தார் வெள்ளகோவில்-கோவை ரோட்டில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மொபட் சென்று கொண்டிருந்தபோது பின்னால் இருந்த தீபா தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே தீபா உயிரிழந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சேரன்நகரை சேர்ந்தவர் பிரீத்ஜான் நாக்த். மதபோதகர். இவருடைய மனைவி தீபா (வயது 33). இவர்கள் குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அமராவதி நகரில் வசித்து வருகிறார்கள். தீபா காங்கேயத்தில் உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் நேற்று ஒரு மொபட்டில் வெள்ளகோவில் சென்று விட்டு, காங்கேயம் புறப்பட்டனர். மொபட்டை பிரீத்ஜான் நாக்த் ஓட்டினார். பின் இருக்கையில் தீபா அமர்ந்து இருந்தார் வெள்ளகோவில்-கோவை ரோட்டில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மொபட் சென்று கொண்டிருந்தபோது பின்னால் இருந்த தீபா தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே தீபா உயிரிழந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்