செய்திகள்
திருச்சுழி அருகே கோழிப்பண்ணை அதிபர் அடித்துக்கொலை
திருச்சுழி அருகே கோழிப்பண்ணை அதிபர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சொக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னிருளன். இவரது மகன் பசுபதி (வயது25). பட்டதாரியான இவர் கோழிப்பண்ணை நடத்தி வந்தார்.
நேற்று காரியாபட்டி சென்று விட்டு இரவில் பசுபதி ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். பஸ்சில் வந்த அவர் உடையனேந்தல் நிறுத்தத்தில் இறங்கி குண்டாற்றின் வழியாக நடந்து சென்றார்.
இந்த நிலையில் தலையில் காயத்துடன் குண்டாற்று பாதையில் பசுபதி பிணமாக கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
திருச்சுழி போலீசார் விரைந்து வந்து பசுபதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக சந்தேகத்தின்பேரில் சொக்கம்பட்டி திருமால், கிருஷ்ணாபுரம் நாகராஜ் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சொக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னிருளன். இவரது மகன் பசுபதி (வயது25). பட்டதாரியான இவர் கோழிப்பண்ணை நடத்தி வந்தார்.
நேற்று காரியாபட்டி சென்று விட்டு இரவில் பசுபதி ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். பஸ்சில் வந்த அவர் உடையனேந்தல் நிறுத்தத்தில் இறங்கி குண்டாற்றின் வழியாக நடந்து சென்றார்.
இந்த நிலையில் தலையில் காயத்துடன் குண்டாற்று பாதையில் பசுபதி பிணமாக கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
திருச்சுழி போலீசார் விரைந்து வந்து பசுபதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக சந்தேகத்தின்பேரில் சொக்கம்பட்டி திருமால், கிருஷ்ணாபுரம் நாகராஜ் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.