செய்திகள்

பழனி முருகன் கோவிலில் 29 நாளில் உண்டியல் மூலம் ரூ. 1.67 கோடி வருமானம்

Published On 2018-09-27 09:55 GMT   |   Update On 2018-09-27 09:55 GMT
பழனி முருகன் கோவிலில் 29 நாளில் உண்டியல் மூலம் ரூ.1 கோடியே 67 லட்சத்து 19 ஆயிரத்து 150-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
பழனி:

பழனி முருகன் கோவிலில், கடந்த மாதம் 28-ந்தேதி உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. அதன் பின்னர் 29 நாட்களுக்கு பிறகு மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது.

கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், மேலாளர் உமா, முதுநிலை கணக்கு அதிகாரி மாணிக்கவேல், அறநிலையத்துறை ஆய்வாளர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது.

இதில் ரூ.1 கோடியே 67 லட்சத்து 19 ஆயிரத்து 150-ஐ பக்தர்கள் காணிக்கையாக உண்டியல்களில் செலுத்தியிருந்தனர். மேலும் தங்கம் 1 கிலோ (1,120 கிராம்), வெள்ளி 8¾ கிலோ (8,750 கிராம்), வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 681-ம் பக்தர்களால் காணிக்கையாக போடப்பட்டிருந்தது.

இது தவிர தங்கத்தால் ஆன வேல், சங்கிலி, மோதிரங்கள், வெள்ளி வேல், வெள்ளிப்பாதம், வெள்ளி வீடு, வெள்ளி காவடி, கிரீடம் மற்றும் வெள்ளி பொருட்களும் பட்டம், பரிவட்டம், நவதானியங்கள், பாத்திரங்கள், கடிகாரம், பட்டு வேஷ்டி போன்ற பல்வேறு பொருட்களும் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

Tags:    

Similar News