செய்திகள்

பொள்ளாச்சி அருகே ஆம்புலன்ஸ் மோதி சப்-இன்ஸ்பெக்டர் மகள் பலி

Published On 2018-09-26 11:11 GMT   |   Update On 2018-09-26 11:11 GMT
பொள்ளாச்சி அருகே ஆம்புலன்ஸ் மோதி சப்-இன்ஸ்பெக்டர் மகள் பலியானார்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சியை அடுத்துள்ள சுப்பே கவுண்டன் புதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் சூலூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மகள் திஷா (13). பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது அண்ணன் மிதுன் சக்கரவர்த்தி. பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகிறார்.

நேற்று திஷா தனது அண்ணன் மிதுன் சக்கரவர்த்தியுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றார். அவர்கள் அம்பராம் பாளையம் அருகே சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த ஆம்புலன்ஸ் மோதியது.

இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு திஷா பரிதாபமாக இறந்தார். மிதுன் சக்கரவர்த்தி சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்புலன்ஸ் டிரைவர் விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News