செய்திகள்

கொளத்தூரில் நாளை அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

Published On 2018-09-24 08:40 GMT   |   Update On 2018-09-24 08:40 GMT
சென்னை மாவட்ட அதிமுக சார்பில் ஈழ தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவத்துக்கு உதவிபுரிந்த தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நாளை பெரவள்ளூரில் நடக்கிறது. #ADMK
சென்னை:

சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈழ தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவத்துக்கு உதவி புரிந்த தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நாளை (செவ்வாய்) மாலை கொளத்தூர் பெரவள்ளூர் சதுக்கம் அருகில் நடக்கிறது.

கூட்டத்துக்கு வடசென்னை வடக்கு (மே) மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு எம்.பி. தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர்கள் ஆர்.எஸ்.ராஜேஷ், நா.பாலகங்கா, வி.என்.ரவி, தி.நகர் சத்யா, எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., ஜெயவர்தன் எம்.பி., நட்ராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் பேசுகிறார்கள். செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜா, நடிகர் அஜய் ரத்தினம், முன்னாள் கவுன் சிலர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். #ADMK
 
Tags:    

Similar News