செய்திகள்

ஊத்தங்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்

Published On 2018-09-23 16:50 GMT   |   Update On 2018-09-23 16:50 GMT
ஊத்தங்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கருத்துரிமை ஜனநாயகம் பாதுகாத்திட தமிழகம் தழுவிய தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கருத்துரிமை ஜனநாயகம் பாதுகாத்திட தமிழகம் தழுவிய தெருமுனை பிரச்சார கூட்டம் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நஞ்சுண்டன், மாவட்ட குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, பாஞ்சாலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலகுழு உறுப்பினர் சுந்தரராஜன் பிரச்சார விளக்கவுரையாற்றினார். 

இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News