செய்திகள்
சென்னை ஐ.ஐ.டி. கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை
சென்னை ஐ.ஐ.டி. கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #StudentSuicide
சென்னை:
சென்னை ஐ.ஐ.டி.யில் கேரளாவை சேர்ந்த சாஹில் சோர்மத் என்ஜினீயரிங் படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் மாணவர் சாஹில் சோர்மத் கல்லூரி விடுதி அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாஹில் சோர்மத் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #StudentSuicide
சென்னை ஐ.ஐ.டி.யில் கேரளாவை சேர்ந்த சாஹில் சோர்மத் என்ஜினீயரிங் படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் மாணவர் சாஹில் சோர்மத் கல்லூரி விடுதி அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாஹில் சோர்மத் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #StudentSuicide