செய்திகள்

காங்கிரஸ் பிரமுகர் கொலை: சுட்டுபிடிக்க உத்தரவிட்ட ரவுடி டிராக் சிவா கைது

Published On 2018-09-21 16:32 GMT   |   Update On 2018-09-21 16:32 GMT
புதுவை காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி டிராக் சிவா கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி:

புதுவை குருசுகுப்பத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பாண்டியன் சில மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக புல்ரி, வாழைக்குளத்தை சேர்ந்த ரவுடி டிராக் சிவா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

டிராக் சிவா தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். எங்கு தேடியும் அவரை பிடிக்க முடிய வில்லை.

எனவே அவரை சுட்டு பிடிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் திருபுவனை பகுதியில் அவர் நடமாடுவதாக அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே அங்கு சென்று அதிரடிப்படை போலீசார் கண்காணித்தார்.

அப்போது டிராக் சிவா மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தார். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதற்கு பிறகு மோட்டார் சைக்கிளில் சென்றபோது டிராக் சிவா விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். இதனால் மடுகரையில் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்த நிலையில் தான் போலீசில் சிக்சி இருக்கிறார்.

அவர் மீது 2 கொலை வழக்கு, வெடிகுண்டு வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

Tags:    

Similar News