செய்திகள்

குலசேகரன்பட்டினத்தில் எச். ராஜாவை கண்டித்து கோவில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-09-20 12:18 GMT   |   Update On 2018-09-20 12:18 GMT
இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் பற்றியும், பெண்கள் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக எச். ராஜாவை கண்டித்து கோவில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உடன்குடி:

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் பற்றியும், பெண்கள் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் அதிகாரிகளின் வீட்டு பெண்களை பற்றியும், பெண் ஊழியர்கள் பற்றியும் அவதூறாக பேசியதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் செயல் அலுவலர் அலுவலகம் முன்பு கோவில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், கோவில் ஆய்வாளர் பகவதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News