செய்திகள்

பெரம்பூரில் நாளை அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

Published On 2018-09-19 08:45 GMT   |   Update On 2018-09-19 08:45 GMT
வடசென்னை தெற்கு மாவட்டம் திரு.வி.க.நகர் பகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நாளை மாலை பெரம்பூரில் நடக்கிறது. #ADMK
வில்லிவாக்கம்:

வடசென்னை தெற்கு மாவட்டம் திரு.வி.க.நகர் பகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நாளை (வியாழன்) மாலை 6 மணிக்கு பெரம்பூர் பாரதி பட்டேல் ரோடு சந்திப்பில் நடக்கிறது. கூட்டத்துக்கு 70-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ஜெயஸ்ரீ மகேஷ் தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, பகுதி செயலாளர் இரா.வீரமணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, டி.ஜி.வெங்கடேஷ் பாபு, தலைமை கழக பேச்சாளர் கோவிந்தசாமி, ஓட்டேரி மூர்த்தி, பிராட்வே குமார், பெரம்பூர் ரபி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மாவட்ட பொருளாளர் பெரம்பூர் ஆர்.மகேஷ் செய்துள்ளார். #ADMK

Tags:    

Similar News