செய்திகள்

பெரியபாளையம் அருகே மதுபாட்டில் பதுக்கிவிற்ற 5 பெண்கள் கைது

Published On 2018-09-19 06:25 GMT   |   Update On 2018-09-19 06:25 GMT
பெரியபாளையம் அருகே மதுபாட்டில் பதுக்கிவிற்ற 5 பெண்களை போலீசார் கைது செய்தனர். #arrest

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள மொண்ணவேடு, எரையூர் சுற்று வட்டார பகுதிகளில் மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தில்லை நடராஜனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

அவரது உத்தரவுப்படி மாவட்ட மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், அழகேசன் ஆகியோர் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற மொண்ணவேடு பேட்டை பகுதியை சேர்ந்த ஞானதீபம் என்ற கருப்பாயி, சுமதி, வெங்கட்டம்மாள், எரையூர் பகுதியை சேர்ந்த மோகனா, ஜெயந்தி ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 5 பேரையும் போலீசார் திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News