செய்திகள்

ராஜபாளையம் அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி

Published On 2018-09-17 10:57 GMT   |   Update On 2018-09-17 10:57 GMT
ராஜபாளையம் அருகே வாகனம் மோதி மூதாட்டி இறந்தார். அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்:

ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் உள்ள தனியார் நூற்பாலை அருகே சம்பவத்தன்று இரவு 70-வயது மதிக்கத்தக்க மூதாட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார்.

உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த மூதாட்டியை அந்த வழியாக வந்த ராஜபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குழந்தைவேல் (35) என்பவர் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு மூதாட்டியின் உடல் நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ் பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News