செய்திகள்

செங்குன்றம் அருகே வழிப்பறி கொள்ளையன் வெட்டிக் கொலை

Published On 2018-09-16 09:48 GMT   |   Update On 2018-09-16 09:48 GMT
செங்குன்றம் அருகே வழிப்பறி கொள்ளையன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்குன்றம்:

சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் ராகுல் (வயது 26). வழிப்பறி கொள்ளையனான இவர் மீது சென்னை சோழவரம், எம்.கே.பி. நகர், வியாசர்பாடி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் ராகுல் நேற்று இரவு 12 மணி அளவில் செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையம் பெரியார் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று வந்த 6 பேர் கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

ராகுல் வெட்டிக் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அவரது மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தது.

அவர் எதற்காக இரவு 12 மணிக்கு அங்கு வந்ததார். அவரை வெட்டிக் கொன்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News