செய்திகள்

வியாசர்பாடியில் தொழிலாளி கொலை - வாலிபர் கைது

Published On 2018-09-16 09:41 GMT   |   Update On 2018-09-16 09:41 GMT
வியாசர்பாடியில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர்:

வியாசர்பாடியில் நேற்று இரவு நடந்த தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். அவரது பெயர் மாஸ்க் கிரீன் (வயது 54). வியாசர்பாடி கணேசபுரம் எம்.எம்.கார்டன் 1-வது தெருவில் வசித்து வந்தார்.

இவருடன் அக்கா மகன் எல்லப்பன் (31) மற்றும் குடும்பத்தினர் வசித்து வந்தனர். நேற்று இரவு மாஸ்க் கிரீன் வீட்டுக்கு வந்து பெண்களிடம் தகராறு செய்தார். அப்போது கோபத்தில் வீட்டுக் கூரையை பிரித்துப் போட்டு ரகளை செய்தார்.

இந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த எல்லப்பன் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டார். அவரிடமும் மாஸ்க்கிரீன் சண்டைக்குப் போனார்.

இதனால் ஆத்திரம் அடைந்த எல்லப்பன் அங்கிருந்த கட்டையால் மாஸ்க்கிரீன் தலையில் அடித்தார். கட்டையில் இருந்த ஆணி அவரது தலையில் பாய்ந்து ரத்தம் பீறிட்டது. சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்தார்.

உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும் வியாசர்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் விரைந்து சென்று விசாரணை நடத்தி எல்லப்பனை கைது செய்தனர்.

Tags:    

Similar News